செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.92 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வினாடிக்கு 5142 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.72 டி.எம்.சியாக இருந்தது.