முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது; நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து வேகமாக குறைந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து வேகமாக குறைந்து வருகிறது.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்படும் நீர்வரத்தால் நீர் மட்டம் உயரும்.

தற்போது வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அணைக்குள் விநாடிக்கு 806 கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை 646 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை 496 கன அடியாகவும் குறைந்தது. 

இதேபோல் நீர்மட்டமும் ஞாயிற்றுக்கிழமை 24.70 அடியாக இருந்தது, திங்கள்கிழமை 124.40 அணியாகவும், செவ்வாய்க்கிழமை 124.05 அடியாக குறைந்தது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போதுமான அளவு பெய்யாததால், அணையின் நீர்மட்டமும் எதிர்பார்த்தபடி உயரவில்லை.  இதனால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.05 அடி உயரமாகவும் அணையில் நீர் இருப்பு 3,430 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 496 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,311 கன அடியாகவும் இருந்தது.  பெரியாறு மற்றும் தேக்கடி ஏரி பகுதிகளில் மழை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com