சாத்தான்குளம்: சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ஒன்றிய நகர அதிமுக சார்பில் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, துணைத் தலைவர் அப்பாதுரை, மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் அன்ன கணேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னதுரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னத் துரை, செயலாளர் பால மேனன், சாத்தான்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பொன் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்பாண்டி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி, முன்னாள் யூனியன் துணைத்தலைவர் ஜெயராணி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன், கிளைச் செயலாளர் பால்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.