பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) வியாழக்கிழமை காலமானார்.
பாளையங்கோட்டை கீழ யாதவர் தெருவில் வசித்து வந்த தொ.பரமசிவன், உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 7.45 மணிக்கு காலமானார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரான தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்), சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
தொ.பரமசிவனுக்கு மனைவி இசக்கியம்மாள், மகன் மாசான மணி, மகள் விஜயலெட்சுமி ஆகியோர் உள்ளனர். தொ.பரமசிவனின் இறுதிச்சடங்கு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9486886667