எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி, மெளன ஊர்வலம்

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையிலிருந்து தொடங்கிய எம்.ஜிஆர்.நினைவு தின மெளன ஊர்வலம் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி மற்றும் மெளன ஊர்வலம் .
அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி மற்றும் மெளன ஊர்வலம் .

 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையிலிருந்து தொடங்கிய எம்.ஜிஆர்.நினைவு தின மெளன ஊர்வலம் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்  33வது எம்.ஜி.ஆர் நினைவு நாள் மெளன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை ஏந்தி  கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர்.

வெள்ளக்கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த அமைதி ஊர்வலமானது திருச்சுழி ரோடு எம்.எஸ்.கார்ணர் பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருஉருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். 

இறுதியாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் நினைவுநாள் அமைதி ஊர்வலம் மற்றும் மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com