தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இன்று புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 13,161 -ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் மேலும் 64,075 பேருக்கும், இதுவரை 1,35,58,661 பேருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும்
11 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,059-ஆக உயா்ந்துள்ளது. 

இன்று வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும்,
வீடுகளிலும் 9,039 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவிலிருந்து இன்று மேலும் 1,098 பேர் குணமடைந்தனர். 

இதையடுத்து குணமடைந்தோா் எண்ணிக்கை 7 லட்சத்து 92,063- ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43ஆவது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழும், சென்னையில் 68ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழும் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com