ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 
8 Afghan militants killed as gun battle erupts in northern Afghanistan.
8 Afghan militants killed as gun battle erupts in northern Afghanistan.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்படி கனிகாம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், அப்பகுதியில் நடைபெற்ற மோதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மோதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com