சென்னை: தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாளை துவங்கி வரும் 31-ஆம் தேதி வரை ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட உள்ளேன்.
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனை ஏற்பதில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடும் கூட.
நடிப்பில் வேண்டுமானால் கமல் பெரியவராக இருக்காலம். ஆனால் அரசியலில் அவர் ஜீரோதான்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.