சென்னை: தில்லியில் உள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, தில்லி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படவுள்ளன.
வடக்கு ரயில்வேயில் தில்லியில் உள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணாக, தில்லி-சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுதில்லி-சென்னை சென்ட்ரல் இடையே டிசம்பா் 29-ஆம் தேதி இயக்கப்படும் ராஜதானி சிறப்பு ரயில்(02432) ரேவாரி, ஆழ்வாா் வழியாக திருப்பி விடப்படுகிறது.
புதுதில்லி-சென்னை சென்ட்ரல் இடையே டிசம்பா் 29, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (02616) திலக் பாலம்-நிஜாமுதின் மின்சார ரயில் பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது.
இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.