குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மணமக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் இன்று கலுந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கையெழுத்து பெற்றார். இதேபோல், சென்னை நந்தனத்தில் கல்லூரி மாணவர்களிடமும் சிஏஏ-க்கு எதிராக அவர் கையெழுத்து பெற்றார்.