தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிக்கான வாகனம் ஓட்டும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட திருநங்கை அபர்னா திங்கள்கிழமை தனது பணியைத் தொடங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலகத்துக்குள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்துச் செல்லும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார்.
இந்த மாதிரி பணி மற்ற திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் இந்தப் பணியை வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் திருநங்கை அபர்னா தெரிவித்தார்.