புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் ஜல்லிக்கட்டு: 1,000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திருநல்லூரில் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,000 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் ஜல்லிக்கட்டு: 1,000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

விராலிமலை: திருநல்லூரில் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,000 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு புதன்கிழமை காலை தொடங்கியது.

முன்னதாக வாடிவாசல் முன் மாவட்ட கோட்டாட்சியர் டெய்சிருமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

காலை 9.15 மணிக்குத் தொடங்கி முதலில் கோயில் காளையும், பின்னர் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். 

தொடர்ந்து போட்டியை கோட்டாட்சியர் டெய்சிருமார், மாவட்ட திமுக இலக்கிய அணி துணைச்செயலர் எம்.பழனியப்பன், கோயில் மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் கொடி அசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில் சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவர்களில் காயமடைந்த சிலருக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, விராலிமலை, மணப்பாறை இலுப்பூர், புதுக்கோட்டையிலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com