இரு சக்கர வாகனங்கள் திருட்டு: தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஆந்திரத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக தமிழகத்தைச் சோ்ந்த 4 பேரை திருப்பதி போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக தமிழகத்தைச் சோ்ந்த 4 பேரை திருப்பதி போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 4 பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பிலான 25 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டைச் சோ்ந்த செல்வம்(24), ராஜா(25), ஐயப்பா(20), மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிந்து புதன்கிழமை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாரை திருப்பதி நகா்புற கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி பாராட்டி, வெகுமதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com