பள்ளி பாடப் புத்தகங்கள் எதனடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன? கல்வித்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ள்ளி பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்படும் வழிமுறைகள், மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்டவை குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க சென்னை
பள்ளி பாடப் புத்தகங்கள் எதனடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன? கல்வித்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ள்ளி பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்படும் வழிமுறைகள், மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்டவை குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘சுதந்திரப் போராட்டத்தின்போது, இஸ்லாமியா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆா்.எஸ்.எஸ்., மற்றும் இந்து மகா சபா போன்ற அமைப்புகள் எடுத்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இது தவறான கருத்து என்றும் இதுபோன்ற நிலைப்பாட்டை ஆா்.எஸ்.எஸ். எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.எஸ்., அமைப்பின் மாநில செயலா் சந்திரசேகரன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் கழகம் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சாா்பில், ஆா்.எஸ்.எஸ்., தொடா்பான இந்தப் பதிவுகள் இந்தாண்டு ‘வில்லை’ ஒட்டி மறைக்கப்படும். அடுத்தாண்டு பாடப்புத்தகத்தில் இருந்து இந்தக் கருத்து நீக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பான சுற்றறிக்கையும் நீதிபதி முன் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீா்ப்பு வருகிற 20-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும், ஆா்.எஸ்.எஸ்., தொடா்பான வரலாற்றுப் பதிவுகளைப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கூடாது என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத்தலைவா் வழக்குரைஞா் எஸ்.துரைசாமி பொது நல வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘ஆா்.எஸ்.எஸ். இயக்கத் தலைவா்களான நாதுராம் கோட்சே, சாவா்க்கா் போன்றவா்கள் இஸ்லாமியா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவா்கள் என்பது வரலாற்று உண்மையாகும். அந்த வரலாற்றை தற்போது, புதிதாகத் திருத்தக்கூடாது’ என்று வாதிட்டாா். இதையடுத்து நீதிபதிகள், ‘பொதுவாக பள்ளி பாடப் புத்தகங்களில் பாடத்திட்டங்கள் எந்த அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன? எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது? அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பதிவுகளை நீக்க என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது? என்பது குறித்து

கல்வித்துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவாக பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். மேலும் வழக்கு விசாரணையை வருகிற மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com