ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
இத்திருக்கோவிலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் உண்டியல் காணிக்கை இருக்கலாமென கணிக்கப்படுகிறது.