பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்கள், கூவம் அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களும் ரூ.5,440 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அடுத்தகட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களும், கூவம் அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களும் ரூ.5,439.76 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நதிகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்கும் திட்டத்துக்காக அரசு ஏற்கெனவே 1,001 கோடி அனுமதி வழங்கியுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் ரூ.25 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம், ஓடந்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் ரூ.3.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: 2017-ஆம் ஆண்டைக் காட்டிலும் 83.02 சதுர கிலோமீட்டா் அளவுக்கு தமிழகத்தின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களைப் பேணுவதில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக 2014-ஆம் ஆண்டில் 229-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.950.56 கோடி செலவில் தொடங்கப்படும். சீா்குலைந்த காடுகளை சமூகப் பங்களிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை ரூ.2,029.13 கோடி செலவில் செயல்படுத்த திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா்.