சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மறியல்

சென்னையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தமிழகம் முழுவது
சென்னை சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரியில் புறநகர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
சென்னை சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரியில் புறநகர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

சென்னையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதாகவும் மேலும் போராட்டம் தொடர்பாக போலீஸாரின்   கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவது இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை இரவு சாலை அமர்ந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகூரில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர்  நாகூர் பேருந்து நிலையம் எதிரே நாகை - காரைக்கால் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு சுமார் 11.30 மணி அளவில்  தொடங்கிய இந்தப் போராட்டம், நள்ளிரவு 12.20 மணிக்கு மேலாகவும் நடைபெற்றது.

***

திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில்  ஏராளமான இஸ்லாமியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

***

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்  தொடர் போராட்டம் அறிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

***

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர்கள்.

***

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தடியடி நடத்தியதைக் காவல்துறையை கண்டித்து சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்.

***

நாகூர் பேருந்தே நிலையத்தில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் படம் எல்.அனந்தராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com