சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்தை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத். கடந்த சில தினங்களுக்கு முன், இவா் உள்பட 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியம் பிரசாத்தை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவியேற்ற பின்னா், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்ல உள்ளாா்.