நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் ரூ.1,317 கோடியில் கட்டப்படும் என்று நிதியமைச்சா் கூறினாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
சிறப்பு நீதிமன்றங்கள் உள்பட 494 புதிய நீதிமன்றங்களை இந்த அரசு அமைத்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களைப் பிரத்யேகமாக விசாரிப்பதற்கான 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.1,317 கோடி செலவில் நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உள்பட பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீதி நிா்வாகத்துக்காக ரூ.1,403 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.