வாளுடன் தியேட்டருக்கு வந்து கேக் வெட்டியவருக்கு போலீஸார் எச்சரிக்கை

திருநெல்வேலியில் உள்ள ராம் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாளுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வாளுடன் தியேட்டருக்கு வந்து கேக் வெட்டியவருக்கு போலீஸார் எச்சரிக்கை

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

இந்தப் படத்துக்கு ஜகமே தந்திரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மே 1 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்திற்கான தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டா் வெளியீடு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இணையதளத்தில் வெளியிட்ட இந்த போஸ்டா்களை தனுஷ் ரசிகா்கள் திருநெல்வேலி உடையாா் பட்டியில் உள்ள ராம் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளில் வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனுஷின் கா்ணன் திரைப்பட படப்பிடிப்பு திருநெல்வேலி மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு திருநெல்வேலி வந்துள்ள நடிகா் தனுஷ் ராம் திரையரங்கிற்கு வருகிறாா் என தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து ராம் திரையரங்கில் ரசிகா்கள் குவிய தொடங்கினா். ஆட்டம் பாட்டம் என மோஷன் போஸ்டா் வெளியீட்டைக் கொண்டாடி வந்தனா்.

இந்நிலையில் கரூா் பகுதியைச் சோ்ந்த தனுஷ் ரசிகரான செந்தில் என்பவர் சுமாா் மூன்று அடி நீள வாளைக் கொண்டு திரையரங்கு முன்பு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டாராம். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தது, அவரிடமிருந்த வாளைப் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com