புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 காளைகளும், சுமார் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் தழுவி வருகின்றனர்.
இதேபோல, பொன்னமராவதி ஒன்றியம் இடையாத்தூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையும் அமைச்சர் விஜயபாஸ்கர் காலையில் தொடங்கி வைத்தார்.