திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்: மலை போல் குவிந்த பூக்கள்

புதுக்கோட்டை நகரில் திருவப்பூரிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்: மலை போல் குவிந்த பூக்கள்

புதுக்கோட்டை நகரில் திருவப்பூரிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது. விடிய விடிய மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர்.  

சிறப்பு மின் அலங்காரத்திலும் ஏராளமான பூத்தேர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. திங்கள்கிழமை அதிகாலை வரை பூச்சொரிதல் தொடர்ந்தது. இதனால் கோவிலின் பிரதான கருவறை  நிரம்பி, வெளியறையிலும் பூக்கள் மலை போல் குவிந்துள்ளன.

மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com