விழுப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் க.பொன்முடி, இரா.மாசிலாமணி, திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரித்ததை அடுத்து உள்ளாட்சி அமைப்புகள் எல்லைகள் புதுப்பிக்கப்பட்டு மறுவரையறை முடிந்து அது தொடர்பான கருத்துக்கள் இக்கூட்டத்தில் கேட்கப்பட்டது.