ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம், பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.