சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை தொடங்கி நள்ளிரவைக் கடந்து வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி இடங்களில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
இதுவரை நீலகிரி, நாமக்கல், குமரி உட்பட 20 மாவட்டங்களில் அனைத்துப் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.