மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரின் 5வது வார்டில் திமுகவை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்து வளர்ந்த வீடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் ஒன்றியம் 5வது வார்டில் உள்ளது. இந்த வார்டில் போட்டியிட்ட பாஜகவின் அரவிந்தன் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
தமிழகத்தில் தாமரையை மலர விடமாட்டோம் என்றும் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்றும் மறைந்த கருணாநிதியின் குடும்பத்தினர் கூறிவரும் நிலையில், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த வீடு உள்ள திருவாரூர் 5வது வார்டிலேயே தாமரை மலர்ந்துள்ளது, திமுகவின் அழிவையும், பாஜகவின் வளர்ச்சியையும் காட்டுவதாக பாஜகவினர் இனிப்பு அளித்து கொண்டாடி வருகின்றனர்.