திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நத்தம் பகுதியில் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள பன்னியாமலை பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜ். இவரது தம்பி சக்திவேல்குமார். இருவரும் சவுதி அரேபிய நாட்டில் வேலை செய்து வருகின்றனர். அழகுராஜ் மகன் சிவா(10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். சக்திவேல்குமார் மகள் மோனிகா(11), 6ஆம் வகுப்பு படித்து வந்தார். குழந்தைகள் இருவரும் அங்குள்ள கல்குவாரி கிடங்கில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தீயணைப்புத் துறையினர் முயற்சியால் மோனிகாவின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிவாவின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நத்தம் பகுதியில் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
இருவரது குடும்பத்திற்கும் நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஏ.ஆண்டிஅம்பலம் ஆறுதல் கூறினார்.