குன்னூர் அருகே இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினர் இருவர் படுகொலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினர் இருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியினர் படுகொலை
பழங்குடியினர் படுகொலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினர் இருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம்  குன்னூர் அருகே கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில், இருளர் பழங்குடியினர் வகுப்பை  சேர்ந்த  ராமசந்திரன் மற்றும் திம்மன் இருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதிரடிப் படையினர் அப்பகுதியில் முகாமிட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 

மெட்டுக்கல்  இருளர் இன கிராமத்தி்ல் 20 ற்கும் குறைவான  குடும்பங்கள் மேரக்காய்  பயிரிட்டுள்ளனர்  இவற்றை   பாதுகாப்பதற்காக ராமசந்திரன்  (38) மற்றும் திம்மன் (19)  ஆகியோர்  நேற்று இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்  இனறு காலை   பார்க்கும்  பாேது   இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில்   காெ ல்லப்பட்டு  கிடந்தனர் இப்பகுதி  வனப் பகுதி என்பதால் சாதாரண  காவலர்கள்  சென்று வருவதில்  சிக்கல் உள்ளதாலும், நக்சல்கள்  நடமாட்டம்  உள்ள பகுதி என்பதாலும் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  அவர்கள்  குற்றவாளிகளைத் தேடும் பணியில்   ஈடுபட்டுள்ளனர்.

பாெது வாக ஆதிவாசி மக்களை  அவ்வப்பாேது  மூளைச்சலவை  செய்து    மாவோயிஸ்ட்டுகள்   தங்களது இயக்கத்தில் சேர்க்க முயல்கிறார்கள் என்று காவல்  துறை தரப்பு கூறி வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கும்    மாவோயிஸ் டுகளுக்கும்    ஏதேனும் தாெடர்பிருக்குமாே  என்ற  காேணத்திலும்   காவல்   துறையினர் விசாரணை  மேற்காெண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com