மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம்: அமைச்சர் பி. தங்கமணி கோரிக்கை

கோடையை சமாளிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம்: அமைச்சர் பி. தங்கமணி கோரிக்கை

கோடையை சமாளிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் இன்று 13.01.2020 மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை அமைச்சர் (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங்கை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் பி. தங்கமணி, கூடுதல்தலைமை செயலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக  இயக்குநர் விக்ரம் கபூர் ஆகியோர் சந்தித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவிக்கையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை முழுமையாக மாற்றுவதற்கு தமிழ்நாட்டில் 4 இலட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு ரூ. 1200 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆகவே மேற்கண்ட நிதியினை வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.  இது தவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்தில் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலர்கள் அறிவுறுத்திவுள்ளார்.

மேலும் மின்சார பயன்பாட்டினை துள்ளியமாக கண்காணிப்பதற்கு வசதியாக சுமார்ட் மீட்டர்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1.4 இலட்சம் சுமார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை படிப்படியாக அனைத்து மீட்டர்களுக்கும் சுமார்ட் மீட்டர்கள் மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிசந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கு  01.08.2019 முதல் வங்கியின் மூலம் நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரியநாளில் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com