அன்னவாசல் அருகே மயில் வேட்டை: 3 மயில்களுடன், மூவர் கைது

அன்னவாசல் அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 3 மயில்களை வேட்டையாடி பிடித்து வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, வேட்டையாடி கொல்லப்பட்ட 3 மயில்கள்
கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, வேட்டையாடி கொல்லப்பட்ட 3 மயில்கள்

அன்னவாசல் அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 3 மயில்களை வேட்டையாடி பிடித்து வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

அன்னவாசல் போலீஸார் வயலோகம் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மூன்று பேருடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். 

அதில் ஒரு சாக்குபையில் ரோமம் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மறைத்து வைத்திருந்த 3 மயில்கள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த மூன்று பேரையும் அன்னவாசல் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (26), பெருமாள் (25), மூர்த்தி (26) என்று தெரியவந்து. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து வழக்குப் பதிந்த அன்னவாசல் போலீஸார், மயிலை உணவுக்காக வேட்டையாடினார்களா அல்லது மருத்துவத்துக்காவா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com