பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் அருகிலுள்ள கிராமங்களில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் 20- ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமலைசமுத்திரம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ பருப்பு, வேட்டி, சேலை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டன. இப்பொருள்களை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன், துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையர் எஸ். சுவாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.
இதன் மூலம், திருமலைசமுத்திரத்தில் 640 குடும்பங்களும், வல்லம்புதூரில் 500 குடும்பங்களும், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டியில் 685 குடும்பங்களும் பயனடைந்தன.