சென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்த இரு பொறியில் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
சென்னை சத்தியபாமா கல்லூரியில் பொறியில் படிக்கும் மாணவர்கள் நரசிம்மா, கோகுல், அருண்குமார் ஆகிய மூவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சுற்றி பார்க்க ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
அப்போது கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த கோகுல் மற்றும் நரசிம்மா ஆகியோரை ராட்சத அலை இழுத்து இழுத்துச் சென்றது. இதில் இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் மீனவர்கள் உதவியுடன் போலீஸார் மீட்டனர். இதையடுத்து பிரதே பரிசோதனைக்காக இருவரது உடலும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.