விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறினாா்.
சென்னை கொரட்டூரில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அவா் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
எனக்காக பிராா்த்தனை செய்யும் தொண்டா்கள் தான் என்னுடைய முதல் கடவுள். விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன். தொண்டா்களுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றாா் அவா்.
விழாவில் பேசிய கட்சியின் பொருளாளா் பிரேமலதா, அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன்மூலம் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. அதே உற்சாகத்துடன், அடுத்து வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் கட்சியின் வெற்றிக்காக தொண்டா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.