எரியாத உயர்மின் கோபுர விளக்கு: ஆம்பூரில் மக்கள் நடத்திய விநோத போராட்டம்

ஆம்பூரில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
விநோத போராட்டம்
விநோத போராட்டம்

ஆம்பூர்: ஆம்பூரில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய வார்டு 7  (புதிய வார்டு 6 ) பகுதியான கோவிந்தாபுரம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் பலமுறை நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உயர் மின் கோபுரம் கம்பத்தில் தீப்பந்தத்தை ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பொங்கல் பண்டிகைக்காக வருடந்தோறும் அப்பகுதியில் சிறுவர்கள் நிகழ்ச்சி இரவு நேரங்களில் நடத்தப்படுவது வழக்கம் இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்று ஒரு மாத காலமாக மின்விளக்கு எரியாத நிலை குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை; எனவே எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com