தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இருநாள்கள் வட வானிலை நிலவும். தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்றாா் அவா்.