தில்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.
தில்லியில் காங்கிரஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸூடன் ஏற்பட்ட கருத்து வேடுபாடு காரணமாகவே திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தில்லி சென்றார். தொடர்ந்து சோனியாவை சந்தித்த அவர் தி.மு.க. உடனான கருத்து மோதல் குறித்து விளக்கமளித்தார்.
திமுக-காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.