பொங்கல் பண்டிகையையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் தினத்தில் பொங்குக மகிழ்ச்சி என்றும் மலர்க அனைவரின் வாழ்க்கை எனவும் உளமாற வாழ்த்துகிறேன். தமிழக மக்கள் வாழ்வில் அன்பு, பாசம், செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் பொங்கி பெருக வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்.
தமிழக சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழகத்தில் வாழும் தெலுங்கு சகோதர, சகோதரிகளுக்கும் எனது உள்ளங்கனிந்த மகாசங்கராந்தி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களையும், தெலங்கானா மக்களுக்கு மகாசங்கராந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.