ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழக்கரையில் தங்கிருந்த காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் இம்ரான்ஹபீப், சையத் அகமது பீர் என்பதும், இவர்கள் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு நன்கொடை வசூலிக்க இங்கு வந்து தங்கியிருப்பதாகவும் அவர்கள் காவல்துறையிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.