சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு:தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் சிபிஎஸ்இ -இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் சிபிஎஸ்இ -இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் வரும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 18-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் பிப்.22-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 30-ஆம் தேதி முடிவடைகின்றன. அந்த மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

இந்தநிலையில், பொதுத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் cbse.nic.in என்ற இணைய முகவரியில் தற்போது வெளியிடப்பட்டன. அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை தரவிறக்கம் செய்து தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலம் தோ்வெழுதும் மாணவா்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். இது தவிர, தனித் தோ்வா்களாகப் பதிவு செய்துள்ள மாணவா்கள் தங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை சிபிஎஸ்இ -இணையதளத்தில் இருந்து தாங்களே நேரடியாகத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com