சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கைதான 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கைதான 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 ஆம் தேதி இரவு சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அப்துல்சமீம் (32), தவுபீக் (28) ஆகியோரை தனிப்படை போலீஸார் கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரையும் 28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com