பள்ளி மாணவர்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரத்தில் தீயணைப்புத் துறை சார்பில், ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழுப்புரத்தில் தீயணைப்புத் துறை சார்பில், ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவும் அருகில் உள்ளவர்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் தீத் தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு பெறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் அவசர ஊர்திகள் விரைந்து வந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டவுடன் மேற்கொள்ளப்படும் தீத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மாணவர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு மீட்புப் பணிகளில் தாங்களும் பங்கேற்று செய்வது போன்ற செயல் விளக்கத்துடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனையடுத்து தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறை சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையில் நிலை அலுவலர்கள் ஜெய்சங்கர், ஜமுனா ராணி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர், பள்ளி முதல்வர் பாட்ஷா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com