சேலத்தில் 1971-இல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து அண்மையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், தான் பேசியது குறித்து மன்னிப்புக் கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த ஊர்வலம்தொடர்பாக தினமணியில் அப்போது வெளியான செய்திகள், தலையங்கம் மற்றும் ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியை வாசகர்களின் பார்வைக்கு தருகிறோம்.