கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. அதில் ஒரு மான் உயிரிழந்த நிலையிலும், இரண்டு மான்கள் உயிருடனும் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒப்பந்த வாடி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று புள்ளி மான்கள் தவறி விழுந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் பருகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் விழுந்த 3 புள்ளி மான்களையும் மீட்டனர். இதில் இரண்டு மான்கள் உயிருடன் மீட்கப்பட்டது. ஒரு மான் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மான்களை தீயணைப்புத்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.