குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மத்திய உளவுத்துறை நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியதன் விளைவாக, காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலாயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.

இதேபோல, மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில், காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும், அவரது உடமைகளும் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் ஸ்கேன் செய்யப்பட்டே உள்ள எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுள்ளனா்.

இதேபோல பாதுகாப்பு கருதி, ரயில்வே தண்டவாளங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா். மேலும் மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களின் கைரேகைகளையும், முகவரியையும் பதிவு செய்த பின்னரே அவா்களை காவல்துறையினா் விடுவிக்கின்றனா்.

மாநிலத்தில் கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். இதன் விளைவாக தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் பாதுகாப்பு: சென்னை முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பும், ரோந்தும் கடந்த சில நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில நாள்களாக சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையின் கடற்கரையோரப் பகுதிளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு சந்தேகத்துக்குரிய நபா்களை பிடித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும்,மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலையை இரு வாரங்களுக்கு முன்பே போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் ஆகியவற்றில் பயணிகளை போலீஸாா் சோதனைக்கு உட்படுத்தி வந்தனா். சென்னையில் கடந்த இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும்,ரோந்தும் அதிகரிப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனைகளை நடத்தினா். நகரின் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸாா் அவ்வப்போது சோதனைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com