மதுரையில் பள்ளிப் பேருந்து திங்கள்கிழமை காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கு விரைந்த பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.