சீனத் தலைமை அமைச்சர் ஜனவரி 27ஆம் நாள் லீக்கெச்சியாங் வூஹானுக்குச் சென்று, கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியை ஆய்வு செய்து, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்தார்.
அதே நாள் சீனாவின் உள்மங்கோலியாவிலிருந்து நிவாரணப் பொருட்களாக, 30 டன் உருளைக்கிழங்குகளும், லியோ நிங் மாநிலத்திலிருந்து 20 டன் கோசுக்கீரைகளும் தொடர்வண்டி மூலம் வூஹானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எதிர்வரும் சில நாட்களில் தொடர்ந்து இவை போன்ற உதவிப்பொருட்கள் வூஹானுக்கு ஏற்றிச்செல்லப்படும்.
மேலும், 26ஆம் நாள் பெய்ஜிங் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, பெய்ஜிங்கில் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்