சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 7.70 லட்சம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,04,057 வழக்குகளைப் பதிவு செய்து 7 லட்சத்து 70 ஆயிரத்து 299 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5,78,854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.16,19,27,405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்படுவதால், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.