காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் கரோனா அதிகம் பரவத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,263 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.