தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம்-மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண் சனிக்கிழமை கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
லட்சுமிபுரம் - மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் கடந்த ஜூன் 26-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே போடியைச் சேர்ந்த பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த முதியவர், ஆண்டிபட்டியைச் சேர்ந்த பெண், கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் கரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர்.