மதுரை மாவட்டத்தில் புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 280 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும், இந்த நோய்க்கு 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 450 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.